எம்பி துரை வைகோ ஏற்பாடு- சவுதியில் இறந்த புதுகை வாலிபர் உடல் தமிழகம் வந்தது
திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையை சேர்ந்த அயலகத்தில் வேலை செய்து வந்த தேவராஜ் வேலு அங்கே திடீரென மரணமடைந்தார். இதுகுறித்து திருச்சி எம்பி மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோவிடம் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து அவரது குடும்பத்தினர் கேட்டுக்கொண்டதன் பேரில், அவரது உடலை தாயகம் கொண்டு வர உதவுவதற்காக உடனடியாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் அலுவலகத்தை தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார். அதன் தொடர்ச்சியாக ரியாத்தில் உள்ள இந்திய தூதரகம் 11.02.2026 […]
உக்ரைன் போர்- குண்டடிபட்ட சிதம்பரம் மருத்துவ மாணவர் மீட்பு.. திருச்சி எம்பி துரை வைகோ
திருச்சியில் துரை வைகோ எம்பி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-சிதம்பரத்தை சேர்ந்த கிஷோர் சரவணன் என்ற மாணவர், மருத்துவ படிப்புக்காக ரஷ்யா சென்றார்.அங்கே ஏஜென்சிகளின் தவறான வழிநடத்தலில், வழக்கில் சிக்க வைக்கப்பட்டு ரஷ்யா குடியிருப்பு பெற்று தருவதாக ரஷ்யா -உக்ரைன் போரில் ஈடுபடுத்தப்பட்டு குண்டடி பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதைத்தொடர்ந்து அவரது பெற்றோர்கள் மகனை மீட்க என்னிடம் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர். நான் டெல்லியில் தமிழக எம்.பி.க்கள் மற்றும் 15 கட்சிகளை […]
வைகோவின் சமத்துவ நடைபயணம் நிறைவு விழா-எம்பிதுரை வைகோ அழைப்பு
திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர், முதன்மை செயலாளர் மதிமுக துரை வைகோ வைகோவின் நிறைவு விழாவிற்கு அழைப்பு விடுத்துள்ளார். அவர் கூறியதாவது… அழைப்பு மடல் -தலைவரை உயிராய் நேசிக்கும் கழகத் தோழர்களே, வணக்கம்! தமிழர் நலனுக்காக கால் கடுக்க, உடல் வலிக்க சமத்துவ நடைபயணம் மேற்கொண்டு வரும் தலைவர் வைகோ அவர்களை வரவேற்று, அவரது தியாகத்திற்கு நன்றி செலுத்திட மதுரையில் 12.01.2026 அன்று நடைபெற உள்ள நடைபயண நிறைவு விழாவில் பங்கேற்க வாரீர்! இயக்கத் தந்தை, தலைவர் வைகோ […]
புது ஜல்பைகுரி- திருச்சி ரயில் சேவை- எம்பி துரை வைகோ நன்றி
அம்ரித் பாரத் விரைவு இரயில் திட்டத்தின் கீழ் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள, புது ஜல்பைகுரி – திருச்சி இரயில் சேவைக்கு மனமார்ந்த நன்றி! வடகிழக்கு இந்தியாவின் புது ஜல்பைகுரியிலிருந்து தென்னிந்தியாவின் திருச்சி வரை இணைக்கும் இந்த வாராந்திர இரயில் சேவை பயணிகளுக்கு விரைவான பயண வசதியை வழங்குகிறது. இந்த இரயில், தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூர், விழுப்புரம் ஜங்ஷன், செங்கல்பட்டு ஜங்ஷன், தாம்பரம், சென்னை எழும்பூர் மார்க்கமாக செல்கிறது. இந்த புதிய இரயில் சேவை வடகிழக்கு மற்றும் […]
ஒற்றுமை தினப்பேரணி… எம்பி துரை வைகோ தொடங்கி வைத்தார்
திருச்சி, நாடாளுமன்ற உறுப்பினர், முதன்மைச் செயலாளர், மறுமலர்ச்சி திமுக., துரை வைகோ கூறியிருப்பதாவது.. திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் நிர்வாக அலுவலக அரங்கத்தில் நேற்று, நேரு இளையோர் அமைப்பு சார்பில் நடந்த சர்தார் வல்லபாய் படேல் நினைவினைப் போற்றிடும் வகையில் ஒற்றுமை தினப்பேரணி நடந்தது. இந்தப் பேரணியை தொடங்கி வைப்பதற்கு முன்பு கல்லூரி மாணவர்களிடம் நான் பேசினேன். அதாவது, இந்தியாவின் உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் பிறந்த தினத்தை நினைவு கூறும் வகையில், […]