சென்னை ஏர்போட்டில் ரூ.10.7 கோடியில் உயர் ரக கஞ்சா பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ரூ.10.7 கோடி மதிப்பிலான உயர்ரக கஞ்சா பறிமுதல் செய்தனர். தாய்லாந்தில் இருந்து கஞ்சாவை கடத்திய இரு பயணிகளிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கைதான இருவரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவுப்பொருட்களுக்குள் மறைத்து எடுக்கப்பட்டு வந்த ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

திருச்சி அருகே காரில் கடத்தப்பட்ட 75 கிலோ குட்கா பறிமுதல்

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே தாளக்குடி பகுதியில் காவல்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கொள்ளிடம் காவல் நிலைய ஆய்வாளர் வீரபாண்டி மற்றும் காவலர்கள் உடன் இணைந்து லால்குடி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார் அப்போது அவ்வழியாக வந்த டாட்டா இன்டிகா காரை நிறுத்தி சோதனை செய்தபோது அந்த காரில் 75 கிலோ குட்கா மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. இது குறித்து குட்காவை பறிமுதல் செய்த போலீசார் வாகனத்தை ஓட்டி வந்த லால்குடி கொபாவளி […]