திட்டக்குடி அருகே லாரி மீது கார் மோதி விபத்து..3 பேர் பலி
கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே டிப்பர் லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். திருச்சியில் இருந்து சென்னை நோக்கி வந்த கார் முன்னால் சென்ற லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. எழுத்தூரில் நிகழ்ந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். படுகாயங்களுடன் ஒருவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காதல் திருமணம் செய்த 3 மாதத்தில் இளம்பெண் சாவு: கடலூரில் உறவினர்கள் மறியல்
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள அழகப்ப சமுத்திரத்தைச் சேர்ந்த தேவ ஜெசிப்பிரியா (22), விழுப்புரம் மாவட்டம் சொர்ணாவூர் மேல்பாதி பகுதியைச் சேர்ந்த வசந்தராஜ் (25) என்பவரைக் காதலித்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். தனியாக வசித்து வந்த இந்தத் தம்பதியிடையே, திருமணமான நாள் முதலே நகை மற்றும் பணம் தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை தேவ ஜெசிப்பிரியா வீட்டில் தூக்கிட்ட நிலையில் மீட்கப்பட்டு […]
திட்டக்குடி அருகே சோகம்: கார் – சுற்றுலா பஸ் மோதல், 3 கல்லூரி மாணவர்கள் பலி
சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு கல்லூரி மாணவர்கள் ஆறு பேர் காரில் சென்று கொண்டிருந்தனர். கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள எழுத்தூர் பகுதியில் கார் வந்தபோது, எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. அதிவேகத்தில் சென்ற அந்த கார், சாலை தடுப்புச்சுவரை தாண்டி எதிர் திசையில் வந்த சுற்றுலா பஸ் மீது பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் காரில் பயணித்த கல்லூரி மாணவர்களான தரணி, நிஷாந்த் மற்றும் விநாயகமூர்த்தி ஆகிய மூவரும் […]
4 மாவட்டங்களில் இன்று கமழைக்கு வாய்ப்பு
செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறையில் இன்று (ஜன.24) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், நாமக்கல், தஞ்சாவூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் நகரின் ஒரு சில இடங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது
கடலூரில் ஜன.,9ம் தேதி தேமுதிக மாநாடு
கடலூரில் ஜன. 9ம் தேதி தேமுதிக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளார். கடலூர் பாசார் கிராமத்தில் ‘மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0’ குறித்த அறிவிப்பை அந்த வீடியோவில் கூறிய அவர், தொண்டர்கள் அனைவரும் தவறாது அந்த மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டும் என அவர் கூறியுள்ளார். மாநாட்டை பிரமாண்டமாக வெற்றிபெற செய்யவேண்டும் என தெரிவித்துள்ளார்.
லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் கைது
கடலூர் மாவட்டம், திருமுட்டம் தாலுக்கா, தோப்புத் தெரு பகுதியை சேர்ந்தவர் நேரு இவரின் மாமனார் நாகராஜன். இவருக்கு விருத்தாசலம் வருவாய் வட்டம், கோட்டுமுளை கிராமத்தில் 8.50 செண்ட் நிலம் உள்ளது. இந்நிலத்திற்கான பட்டா அந்நிலத்தின் பக்கத்து நிலத்தின் உரிமையாளரான சங்கரன் என்பவரில் தவறாக இருந்துள்ளது. அதனை சரிசெய்ய மேற்படி நாகராஜன் விருத்தாசலம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு செய்துள்ளார். இந்த மனுகுறித்து விருத்தாசலம் வருவாய் வட்டாட்சியர் அறிக்கை அளிக்க விருத்தாசலம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் முதுநிலை […]
மதுபோதையில் தாயை கொடூரமாக கொன்ற மகன்…
கடலூர் மாவட்டம் பண்ருட்டி சேக்கிழார் தெருவை சேர்ந்தவர் ராஜலட்சுமி (60).இவருடைய கணவர் டேவிட் உயிரிழந்த நிலையில் விஜய் (28) மற்றும் மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில் விஜய் மது மற்றும் கஞ்சா போதைக்கு அடிமையானதால் அடிக்கடி போதையில் வந்து தாய் ராஜலட்சுமி மற்றும் பாட்டி மல்லிகா மனநிலை பாதிக்கப்பட்ட சகோதரனையும் தாக்கி ரகளையில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ராஜலட்சுமி தனது தாய் வீடான வேலூரில் கடந்த வாரம் சென்று […]
தனியார் பஸ்-வேன் மோதி விபத்து… 30 பேர் காயம்
கடலூர் மாவட்டம், வடலூர் அருகே தனியார் பஸ், வேன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 30 பேர் காயம் அடைந்துள்ளனர். விபத்தின் போது அதிர்ஷ்டவசமாக ஏரியில் கவிழாமல் நூலிழையில் வேன் தப்பியது. பஸ்சும் வேனும் மோதிய விபத்தில் 25 பெண்கள் உட்பட 30 பேர் காயம் அடைந்துள்ளனர். உடனடியாக காயம் அடைந்த 30க்கும் மேற்பட்டோர் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
டூவீலர் மீது லாரி மோதி விபத்து… வாலிபர்கள் பலி
கடலூரில் லாரி மோதி பரிதாபமாக உயிரிழந்த தனியார் நிறுவன ஊழியர்கள். பைக் மீது லாரி மோதி வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் , சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.