பெண் போலீஸ் தூக்கிட்டு தற்கொலை… கணவன் கைது

சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு போலீசாக பணியாற்றி வந்தார் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த புவனேஸ்வரி (வயது 29). இவருடைய கணவர் சிலம்பரசன்(32), ஆவடி சிறப்பு காவல்படை போலீஸ்காரராக வேலைபார்த்து வருகிறார். இருவரும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. போலீஸ் தம்பதியான இவர்கள், எழும்பூர் போலீஸ் நிலையம் பின்புறம் உள்ள போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தனர். திருமணத்துக்கு முன்பு புவனேஸ்வரி தனக்கு தெரிந்த ஒருவருக்கு ரூ,60 ஆயிரம் கடனாக […]

மனைவி-மகளை தாக்கிய கணவன் கைது… திருச்சி க்ரைம்

மனைவி, மகளை தாக்கிய கணவன் கைது திருச்சி உறையூர் மின்னப்பன் தெருவை சேர்ந்தவர் உதயகுமார் (26). இவரது மனைவி ஜனனி (23. ) இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். உதயகுமார் அடிக்கடி ஜனனியிடம் சண்டையிட்டு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 24ந்தேதி ஜனனி உறையூர் பாண்டமங்கல புது வெள்ளாளர் தெருவில் உள்ள தனது தாய் வீட்டில் இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த உதயகுமார் ஜனனியை தகாத வார்த்தைகளால் திட்டி மனைவி, மகளை தாக்கியுள்ளார். […]

இன்ஸ்டாகிராம் ‘ரீல்ஸ்’ காதல்: விடுதியில் கள்ளக்காதலியுடன் இருந்த கணவன் கையும் களவுமாக கைது

பெங்களூருவைச் சேர்ந்த ஜெட்ரேலோ ஜேக்கப் என்பவர், தனது மனைவியைப் பிரிந்து வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார். மேலும், கள்ளக்காதலியுடன் சேர்ந்து ரீல்ஸ் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்துள்ளார். இதுகுறித்து அவரது மனைவி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்திருந்தார். புகாரில், தனது கணவர் தன்னை சாதிப் பெயரைச் சொல்லித் திட்டுவதாகவும், துன்புறுத்துவதாகவும் குறிப்பிட்டிருந்தார். ​இந்நிலையில், எலக்ட்ரானிக் சிட்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் ஜேக்கப் தனது கள்ளக்காதலியுடன் தங்கியிருப்பதை அறிந்த மனைவி, போலீசாருக்குத் தகவல் […]

மருத்துவமனை முன்பு நர்சை கழுத்தை அறுத்து கொன்ற கணவன்

ஆந்திர மாநிலம், விஜயவாடா மாவட்டம், துர்கா அக்ராஹாரத்தை சேர்ந்தவர் விஜய் (40). இவர் பவானிபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் தொழில்நுட்ப வல்லுனராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி சரஸ்வதி (30). நுஜிவீடுவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை செய்து வந்தார். இருவரும் காதலித்து 2022-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். தம்பதிக்கு 2 வயதில் மகன் உள்ளான். திருமணத்திற்கு பிறகு விஜய்க்கு மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு […]