ஒருவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவெளியில் பேசக்கூடாது- நடிகை திரிஷா காட்டம்
த.வெ.க. தலைவர் விஜய் கடந்த 13ம் தேதி சேலத்தில் நிர்வாகிகள் சந்திப்பு பொதுக் கூட்டம் நடத்தினார். இந்தக் கூட்டத்தில் அவர் பேசியது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பாஜக தமிழ்நாடு தலைவர் நயினார் நாகேந்திரன், “நடிகை திரிஷாவைவிட்டு விஜய் வெளியே வரவேண்டும். வீட்டைவிட்டு வெளியே வரவேண்டும்” எனப் பேசியது பெரும் கண்டனத்துக்கு உள்ளானது. நடிகை திரிஷா குறித்த நயினார் நாகேந்திரன் கருத்துக்கு அரசியல் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்தனர். ஒரு பெண் குறித்து பொறுப்பில் இருக்கும் கட்சி […]
எம்பி-க்கள் சஸ்பெண்ட்: பாஜக அரசுக்கு சிபிஎம் மாநில செயலாளர் பெ. சண்முகம் கடும் கண்டனம்
மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியைப் பேச விடாமல் தடுத்ததோடு, அதற்கு நியாயம் கேட்ட தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சு. வெங்கடேசன், மாணிக் தாகூர் உள்ளிட்ட 8 பேரை சஸ்பெண்ட் செய்த ஒன்றிய பாஜக அரசின் நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து சிபிஎம் மாநில செயலாளர் பெ. சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேச […]
மாவட்ட நீதிபதி செம்மல் பணியிடை நீக்கம்-ராமதாஸ் கடும் கண்டனம்
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- காஞ்சிபுரத்தில் பணியாற்றி தற்போது அரியலூர் முதன்மை மாவட்ட நீதிபதியாகப் பணியாற்றிய மாவட்ட நீதிபதி ப.உ.செம்மல் பணியிடை நீக்கம் நீதிக்கு எதிராக உள்ளது. மாவட்ட நீதிபதி ப.உ.செம்மல் தன்னிடம் வரும் வழக்குகளில் வழக்காடிகள் பாதிக்கப்பட்டுள்ளார்களா அல்லது இல்லையா என்பதைக் கண்டறிந்து பாதிக்கப்பட்டிருப்பின் அவர்கட்கான சட்டப்படியான நிவாரணத்தை தொடர்ந்து 26 ஆண்டுகளாக நீதிக்கு உட்பட்டு வழங்கி வந்தவர். பல்வேறு வழக்குகளை அவர் கையாண்ட விதம் நீதித்துறை வழக்கறிஞர்கள் மற்றும் பொது ஜன […]
100 நாள் வேலைத் திட்டத்தில் காந்தி பெயரை நீக்குவதா?.. செல்வபெருந்தகை கண்டனம
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- மன்மோகன்சிங் தலைமையில் 2004-ம் ஆண்டு அமைந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுகிற வகையில் கிராமப்புற மக்களிடையே நிலவுகிற வேலையில்லா திண்டாட்டத்தை போக்கும் வகையில் வறுமையை ஒழிக்கின்ற நோக்கத்தில் 2006-ம் ஆண்டில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டம் கொண்டு வரப்பட்டது. அதன் பிறகு அக்டோபர் 2009 முதல் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டம் என்று பெயர் […]
மெட்ரோ விவகாரம்- முதல்வர் ஸ்டாலின் கண்டனம்
தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் , கோயில் நகர்’ மதுரைக்கும், ‘தென்னிந்திய மான்செஸ்டர்’ கோவைக்கும் “NO METRO” என நிராகரித்துள்ளது ஒன்றிய பா.ஜ.க. அரசு! அனைவருக்கும் பொதுவானதாகச் செயல்படுவதுதான் அரசுக்கான இலக்கணம். அதற்கு மாறாக, பா.ஜ.க.வைத் தமிழ்நாட்டு மக்கள் நிராகரிப்பதற்காக இப்படி பழிவாங்குவது கீழ்மையான போக்கு. பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் உள்ள சிறிய இரண்டாம் நிலை மாநகரங்களுக்குக் கூட மெட்ரோ ரெயிலுக்கான ஒப்புதல் வழங்கிவிட்டு, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களைப் புறக்கணிப்பது அழகல்ல. கூட்டாட்சிக் […]