கரூர் அருகே இரவில் கடப்பாரையுடன் நடமாடும் முகமூடி கொள்ளையர்கள்- பரபரப்பு
கரூர் அருகே இரவு நேரத்தில் முகமூடிக் கொள்ளையர்கள் இருவர் கையில் கடப்பாரையுடன் நடமாடும் சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கரூர் மாவட்டம், புலியூர் பேரூராட்சிக்குட்பட்ட உட்பட்ட வெள்ளாளப்பட்டி பகுதியில் நேற்று நள்ளிரவு நேரத்தில் முகமூடி கொள்ளையர்கள் நடமாடும் காட்சி அங்குள்ள சிசிடிவி கேமரா ஒன்றில் பதிவாகியுள்ளது. வெள்ளாளப்பட்டி கிராமத்தில் கரூர் – திருச்சி தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் அமைந்துள்ள இரண்டு வீடுகளில் முகமூடி கொள்ளையர்கள் கையில் கடப்பாறையுடன் கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர். […]