விவசாய உபகரணங்களுடன் கலெக்டர் அலுவலகம் முற்றுகை- காங்., போராட்டம்

விவசாய உபகரணங்களுடன் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை: 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயரை நீக்கியதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் திடீர் போராட்டம். மத்தியில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கொண்டு வந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில், காந்தியின் பெயரை நீக்கி புதிய பெயருடன் திட்டத்தை நடைமுறைப்படுத்தியதை கண்டித்து, அரியலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் ஆட்சியர் அலுவலக வாசலில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரியலூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் மாரியம்மாள் தலைமையில், […]

அரசு பஸ்சில் பெண்களிடம் ரகளை- ரத்த வௌ்ளத்தில் கிடந்த ஆசாமி

கோவை அரசுப் பேருந்துகளில் போதை ஆசாமிகளின் ரகளைகளும், பயணிகளின் பாதுகாப்பும் பெரும் கேள்விக்குறியாகி வரும் நிலையில், இன்று காந்திபுரம் பேருந்து நிலையத்தில் பெண்களை போதையில் ஆபாசமாக திட்டி தர்ம அடி கொடுத்த ஆசாமி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ரத்தக் காயங்களுடன் கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ​கோவை, காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து கோவைபுதூர் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தில், முன்பக்கப் படிக்கட்டில் ஏறிய சுமார் 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், […]

டிராக்டர் மற்றும் நகையைப் பறித்த அதிமுக பிரமுகர்: திருச்சி ஆட்சியர் அலுவலகம் முன் பெண் தீக்குளிக்க முயற்சி

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தின் போது, அதிமுக பிரமுகரால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் புலிவலம் அருகே உள்ள வளையப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தனலட்சுமி. அதே பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் அதிமுக பிரமுகராக உள்ளார். இவர் தனலட்சுமியிடமிருந்த டிராக்டரை வாடகைக்கு எடுத்துக்கொண்டு, அதற்கான வாடகைப் பணத்தைத் தருவதாகக் கூறியுள்ளார். மேலும், தனலட்சுமியிடம் இருந்த $2 \frac{1}{2}$ பவுன் நகையையும் அவசரத் […]

கோவை கலெக்டர் ஆபீசுக்கு14வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதைத் தொடர்ந்து கோவை மாநகர போலீசார் மற்றும் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர் குழுவினர் மோப்ப நாயுடன் வந்து சோதனை செய்தனர். இதில் வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படவில்லை. கடந்த சில மாதங்களாக இதுபோல் வெடிகுண்டு மிரட்டல் வந்து கொண்டு இருக்கிறது. தற்போது 14வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. மிரட்டல் விடுத்த நபர் ரமேஷ் என்ற பெயரில் டார்க் நெட் பயன்படுத்தி இ-மெயில் அனுப்பி […]

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்..

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடந்தது. இதில் விவசாயிகள் பேசியதாவது: தோழகிரிபட்டி கோவிந்தராஜ் :- தஞ்சை மாவட்டத்தில் உள்ள நிரந்தர நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் உலர்க்களம் கட்டித் தர வேண்டும். தனிநபர் ஆழ்குழாய் கிணறு அமைக்க ரூபாய் 10 லட்சம் செலவாகிறது இதில் 5 லட்சம் மானியமாக கொடுத்தால் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். தற்போது கனமழையால் பாதித்த பயிர்களுக்கு ஏக்கருக்கு 30,000 வழங்க வேண்டும். […]

திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு தரைக்கடை வியாபாரிகள் போராட்டம்.. பரபரப்பு

திருச்சி மெயின் கார்டு கேட் ,என்.எஸ்.பி. ரோடு தரைக்கடை வியாபாரிகள் 100 பேர் இன்று காலை திருச்சி மாவட்ட நீதிமன்றத்திற்கு திரண்டு வந்தனர்.பின்னர் தரைக்கடை வியாபாரிகள் அனைவரும் தரைக்கடை வியாபாரிகள் கூட்டமைப்பு நிர்வாகிகள் அஸ்ரப் அலி, ஜீவா, அன்சாரி, செந்தில், கபீர் அகமது, லதா ஆகியோர் தலைமையில் திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதியை சந்தித்து, தனித்தனியே மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- .என்.எஸ்.பி ரோடு, மெயின் கார்டு கேட் பகுதியில் நாங்கள் 10 முதல் 40 […]

கரூர் கலெக்டர் அலுவலகத்தில் தெரு நாய்கள் தொல்லை.. அச்சம்

கரூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் தெரு நாய்கள் தொல்லையால் பொதுமக்கள் அச்சம்: அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை. கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம் அதனை தொடர்ந்து இன்று குறைதீர்க்கும் கூட்டத்திற்கு ஏராளமான பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனர். அப்பொழுது தெரு நாய்கள் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் செல்லும் சாலையில் சுற்றி திரிகிறது இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட […]

கலெக்டர் அலுவலகத்தில் SIR விழிப்புணர்வு ரங்கோலி… புதிய முயற்சி

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மகளிர் திட்டம் சார்பில், வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ரங்கோலி கோலம் அமைக்கப்பட்டது. வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பொதுமக்கள் அதிகம் வருகை தரும் ஆட்சியர் அலுவலக வளாகமே விழிப்புணர்வுக்கான தளமாக தேர்வு செய்யப்பட்டது. இந்த கோலத்தை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர் நேரில் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: இந்திய தேர்தல் ஆணைய அறிவிப்பின் […]

கலெக்டர் அலுவலகத்தில் புகுந்த பாம்பு.. அலுவலர்கள் அச்சம்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் கோவை நகரத்தின் மையப் பகுதியில் அமைந்து உள்ளது. இது மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையகமாக உள்ளது. இங்கு தினந்தோறும் உதவித் தொகை உள்ளிட்ட நலத் திட்டங்களுக்கு விண்ணப்பிக்க, குறைகேட்பு முகாமில் பங்கேற்க, மனு அளிக்க என ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்வது வழக்கம். கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பழையது, புதியது என்று 2 கட்டடங்கள் உள்ளன. இதில் புதிய கட்டடத்தில் மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோரின் அறைகளும், குடிமைப் […]