உடுமலை அருகே சுற்றுலா வேன் மோதி கல்லூரி மாணவி பலி

விருதுநகரைச் சேர்ந்த 20 பேர் நேற்று வேன் ஒன்றில் கோவை மாவட்டம் ஆனைமலை மாசாணி அம்மன் கோயிலுக்குச் சுற்றுலா வந்தனர். தரிசனத்தை முடித்துவிட்டு நேற்று மாலை அவர்கள் மீண்டும் விருதுநகர் நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தனர். உடுமலை சாலையில் எரிசனம்பட்டி அருகே வேன் வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென சாலையோர பள்ளத்தில் பாய்ந்தது. இதில் வேனில் இருந்தவர்களுக்கு அதிர்ஷ்டவசமாக காயம் ஏற்படவில்லை. ஆனால், அதே சமயம் அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மீது வேன் பலமாக மோதியது. […]