மத்திய அரசை கண்டித்து பொள்ளாச்சியில் காங்கிரஸ் போராட்டம்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பெயரை மாற்றிய மத்திய அரசின் நடவடிக்கையைக் கண்டித்து, பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் கந்தசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், “மத்திய அரசு நூறு நாள் வேலைத் திட்டத்தின் பெயரை மாற்றியதை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். மீண்டும் இத்திட்டத்திற்கு ‘மகாத்மா காந்தி’ பெயரையே சூட்ட வேண்டும். ஏற்கனவே […]