கரூர்: கார் கண்ணாடியை உடைத்து ரூ.2 லட்சம் கொள்ளை
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த விவேகானந்தர் என்பவர், பட்டுப் புடவைகள் வாங்குவதற்காகக் கரூர் ராயனூர் பகுதிக்கு வந்துள்ளார். புடவைகளை வாங்கிக்கொண்டு நேற்று இரவு மீண்டும் சேலத்திற்குப் புறப்பட்டார். இரவு 8:48 மணியளவில் கரூர் கோவை சாலையில் உள்ள ஓர் உணவகத்தின் முன்பு தனது ஃபார்ச்சூனர் காரை நிறுத்திவிட்டுச் சாப்பிடச் சென்றுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள், காரை நீண்ட நேரம் நோட்டமிட்டுள்ளனர். சமயம் பார்த்து அவர்களில் ஒருவன் காரின் கண்ணாடியை உடைத்து, உள்ளே பையில் […]