கார் விபத்தில் MLA மகள் உட்பட 3 பேர் பலி

மத்தியப் பிரதேச மாநிலம் ராஜ்பூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. பாலா பச்சன். மாநிலத்தின் முன்னாள் உள்துறை அமைச்சராகப் பணியாற்றிய இவரது மகள் பிரேர்னா பச்சன். நேற்று இரவு பிரேர்னா தனது நண்பர்கள் மூன்று பேருடன் காரில் சென்றுகொண்டிருந்தார். இந்தூர் மாவட்டம் ராணாமண்டல் பகுதியில் கார் சென்றபோது, எதிர்பாராத விதமாக எதிரே வந்த லாரி ஒன்று கார் மீது பயங்கரமாக மோதியது.இந்த கோர விபத்தில் காரின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இதில் பிரேர்னா பச்சன் மற்றும் […]

தெலுங்கானாவில் கோர விபத்து: 4 இளைஞர்கள் பலி, ஒருவர் படுகாயம்

தெலுங்கானா மாநிலம் மிர்சாகுடா கேட் பகுதியில் இன்று அதிகாலை சுமார் 1.30 மணியளவில் நிகழ்ந்த பயங்கர கார் விபத்தில் நான்கு இளைஞர்கள் உயிரிழந்தனர். அதிவேகமாக வந்த நான்கு சக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில், காரில் பயணித்த கர்கயாலா சுமித், நிகில், பால்முரி ரோகித் மற்றும் தேவலா சூர்ய தேஜா ஆகிய நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் சுங்கரி நட்சத்திரா என்பவர் படுகாயங்களுடன் உயிர் தப்பினார். அவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் […]

கோவை அருகே பயங்கர கார் விபத்து… வாலிபர் தீயில் கருகி பலி

கோவை மாவட்டம் மதுக்கரை,திருமலையம்பாளையம் அருகே ஏற்பட்ட பயங்கர கார் விபத்தில் வாலிபர் ஒருவர் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் கோவை குளத்துப்பாளையத்தைச் சேர்ந்த விமல் (22) என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவ நேரத்தில் காரில் மூன்று பேர் பயணித்ததாக கூறப்படுகிறது. விபத்து ஏற்பட்ட போது கார் தீப்பிடித்த நிலையில், அதில் விமல் மட்டும் சிக்கி வெளியே வர முடியாமல் தீயில் கருகி உயிரிழந்தார். மற்ற இருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். […]

பக்தர்கள் சென்ற கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து…3 பேர் பலி

உத்தரகாண்ட் மாநிலம் நைனிடால் பகுதியில் உள்ள காஞ்சி தாம் ஆன்மிக தளத்திற்கு 7 பக்தர்கள் காரில் சென்றனர். அந்த கார் பொவாலி பகுதி அருகே வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த 50 அடி ஆழம் கொண்ட பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.இந்த விபத்து குறித்து தகவலறிந்து போலீசார் மற்றும் மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 3 பக்தர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக […]