41 பேரை கொன்ற விஜய்.. தூத்துக்குடி பாதிரியார் பரபரப்பு பேச்சு
திருச்செந்தூர் மாவட்ட தேவாலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில், பாளையங்கோட்டை புனித சவேரியார் கல்லூரி முதல்வர் காட்வின் பேசிய கருத்துகள் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளன. வன்முறையாக நடிக்கும் நடிகர்களுக்கு (நடிகர் விஜய்) மாணவர்கள் மத்தியில் ஆதரவு பெருகி வருவது குறித்து அவர் தனது கவலையை வெளிப்படுத்தினார். “கரூரில் 41 பேரை கொன்ற ஒருவனுக்கு ஆதரவு அதிகரிப்பது ஏன்?” என கேள்வி எழுப்பிய அவர், இளைஞர்கள் சினிமா மோகத்தை தவிர்த்து பாரம்பரிய விழுமியங்களை போற்ற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
நிச்சயம் ஒரு ஔி பிறக்கும்.. கிறிஸ்துமஸ் விழாவில் விஜய் பேச்சு
தவெக தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்ற சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுன் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். தவெக கட்சித் தலைவர் விஜய் அவர்கள் கிறிஸ்மஸ் மரத்திற்கு ஒளி ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார். பேராயர்களுக்கு கிறிஸ்மஸ் பரிசு வழங்கினார் விஜய். இந்த கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்றுள்ள பொதுமக்களுக்கு தவெக தலைவர் விஜய் நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். மேலும் விழாவில் பங்கேற்றுள்ள முக்கியஸ்தர்களுக்கு விஜய் […]