மோடியை தன்மீது சவாரி செய்ய அதிமுக அனுமதித்ததால்- நீட் திணிப்பு
மோடியை தன்மீது சவாரி செய்ய அதிமுக அனுமதி அளித்ததன் காரணமாகவே நீட், உதய் மின் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் தமிழகத்திற்குள் திணிக்கப்பட்டது: ஒன்றிய அரசிடம் தமிழ்நாட்டின் கதவை திறந்து விட்டு, அதிகாரத்தை அடகு வைத்ததை திண்டுக்கல் சீனிவாசன் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார் என அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கடும் தாக்கு. அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகில் மொழிப்போர் போராட்டத்தின் போது தனது இன்னுயிரை ஈந்த கீழப்பழுவூர் சின்னசாமியின் நினைவாக மூன்று கோடி மதிப்பில் கட்டப்பட்ட நினைவு அரங்கத்தை, தமிழ்நாடு […]
விஜய் தன் சம்பளத்தை வௌிப்படையா கூறுவாரா?ஜெயக்குமார் கேள்வி
அதிமுகவை விமர்சிக்கும் விஜய் தனது சம்பளம் எவ்வளவு என வெளிப்படையாக கூறுவாரா? என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் ‘விஜய் வாங்கும் சம்பளத்தில் “கறுப்பு” அதிகம்; “வெள்ளை” குறைவு. ஆதவ் அர்ஜூனாவின் லாட்டரி பணத்தில்தான் தான் தவெக கட்சியே நடக்கிறது. யார் யாரையும் விமர்சனம் செய்ய வேண்டும் என்று விவஸ்த்தை இல்லை.விஜய் இப்படி மேடையில் நடனமாடியதால் கரூரில் இறந்த 41 பேரின் குடும்பம் எவ்வளவு வேதனைப்படும்’ எனவும் ஜெயக்குமார் பேட்டி அளித்துள்ளார்.
IPL ஏலத்தை வெளிநாட்டில் நடத்துவது ஏன்? காங்., கேள்வி
IPL 2026 சீசனுக்கான மினி ஏலம் இன்று துபாயில் தொடங்க உள்ளது. 350 வீரர்களை உள்ளடக்கிய இந்த ஏலத்தில் 240 இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணி அதிகபட்சமாக ரூ.64 கோடி பட்ஜெட் உடன் பங்கேற்கிறது, மும்பை இந்தியன்ஸ் (MI) அணி குறைந்தபட்சமாக ரூ.2.75 கோடி உடன் ஏலத்தில் இறங்குகிறது. இந்த ஏலம் IPL அணிகளின் அடுத்த சீசன் உத்தியை தீர்மானிக்கும் முக்கியமானது, பல வீரர்கள் பெரிய விலைக்கு போகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. […]