மன கோட்டை மண் கோட்டையாகும்-விஜயை சீண்டிய வைகோ!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை கடுமையாக விமர்சித்துள்ளார். “கலைத்துறையில் இருந்து வந்த அந்த சகோதரர் ஆகாயத்தில் மனக்கோட்டை கட்டுகிறார். காகிதக் கப்பலில் கடலை கடக்க முயல்கிறார். அது வெறும் மண்கோட்டையாகத்தான் போகும். அவரின் முதலமைச்சர் கனவு ஒருபோதும் நனவாகாது” என்று வைகோ தெரிவித்தார். கரூர் ஸ்டாம்பேட் சம்பவத்தில் 41 உயிரிழப்பு ஏற்பட்டும் விஜய் உடனடியாக அனுதாபம் தெரிவிக்கவில்லை என்றும், பொறுப்புணர்ச்சி இல்லாமல் இரவோடிரவாக சென்னை சென்றுவிட்டார் என்றும் வைகோ குற்றம் சாட்டினார். […]