தேசிய கார் கோப்பை பந்தயம்- கோவையில் சீறி பாய்ந்த கார்கள்
கோவை செட்டிப்பாளையத்தில் உள்ள கரி மோட்டார் ஸ்பீடுவே”யில் தேசிய அளவிலான கார் பந்தயம் 2 நாட்கள் நடைபெற்றது. இதில் தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, டெல்லி, மராட்டியம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் மிக முக்கிய பந்தயமான எல்.பி.ஜி. பார்முலா 4 பந்தயத்தில் கர்நாடகா மாநிலம் பெங்களூருவை சேர்ந்த வீரர் துருவ் கோஸ்சுவாமி 19 நிமிடம், 58 வினாடிகளில் இலக்கை கடந்து வெற்றி பெற்றார். ருகன் ஆல்வா 2-ம் இடம், தில்ஜித் 3-ம் […]