ஆன்லைன் வர்த்தகத்தில் ரூ.57 லட்சம் மோசடி: ஐ.டி. ஊழியர் தவிப்பு
தஞ்சாவூரைச் சேர்ந்த 34 வயது இளைஞர் ஒருவர், பெங்களூருவில் உள்ள ஒரு மென்பொருள் (IT) நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி, இவரது வாட்ஸ்-அப் எண்ணிற்கு ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் பெரும் லாபம் ஈட்டலாம் என்று ஒரு குறுந்தகவல் வந்துள்ளது. அந்தத் தகவலில் இருந்த போலி தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டபோது, மர்ம நபர் ஒருவர் ஆசை வார்த்தைகளைக் கூறி ஒரு செயலியைப் (App) பதிவிறக்கம் செய்ய வைத்துள்ளார்.அந்தச் செயலியில் ஆரம்பத்தில் குறைந்த […]