டெல்லியில் ஏ.ஐ. மாநாடு: நட்சத்திர ஓட்டல் அறை வாடகை ரூ.30 லட்சமாக உயர்வு

ஏ.ஐ. மாநாட்டை முன்னிட்டு டெல்லியில் நட்சத்திர ஓட்டல் அறை வாடகை ரூ.30 லட்சம் வரை அதிரடியாக உயர்ந்துள்ளது. “செயற்கை நுண்ணறிவின் தாக்கம்” என்ற தலைப்பில் ஏஐ மாநாடு டெல்லியில் பிப்ரவரி 19, 20 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. சர்வதேச அளவில் கோலோச்சும் நிறுவனங்களின் தலைவர்கள் பங்கேற்பதால் மாநாடு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏ.ஐ. மாநாட்டில் மெட்டா அலெக்சாண்டர் வாங்க், கூகுள் சுந்தர் பிச்சை, டெமிஸ் ஹசாபிஸ் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். ஏஐ மாநாட்டில் உலகம் முழுவதும் இருந்து பிரபல […]

மேம்பாலம் அருகே நிறுத்தப்பட்டிருந்த காரில் பெண் உள்பட 3 பேர் சடலமாக மீட்பு

டெல்லி பிரகதி நகர் மேம்பாலம் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் நீண்ட நேரமாக நின்றுகொண்டிருந்த காரை போலீசார் சோதனையிட்டபோது, அதில் பெண் உட்பட 3 பேர் உயிரிழந்து கிடப்பது தெரியவந்தது. போலீசார் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இவர்கள் தற்கொலை செய்துகொண்டனரா அல்லது கொலை செய்யப்பட்டனரா என்பது குறித்துப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூடப்படாத பள்ளத்தில் விழுந்து இளைஞர் பலி: 3 பொறியாளர்கள் சஸ்பெண்ட்

டெல்லியின் ஜனக்புரி பகுதியில் நேற்று இரவு யுவராஜ் சிங் (25) என்ற இளைஞர் தனது மோட்டார் சைக்கிளில் ஜனக்புரி மேம்பாலத்திற்கு அடியில் சென்று கொண்டிருந்தார். அந்தப் பகுதியில் டெல்லி குடிநீர் வாரியம் (Delhi Jal Board) சார்பில் தண்ணீர் குழாய் பதிப்பதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தன. இதற்காக சாலையில் ஒரு பெரிய பள்ளம் தோண்டப்பட்டிருந்தது. வழக்கமான பாதுகாப்பு விதிமுறைகளின்படி, பள்ளத்தைச் சுற்றி எச்சரிக்கை பலகைகளோ, தடுப்புகளோ அல்லது இரவு நேரத்தில் தெரியும் வகையிலான விளக்குகளோ வைக்கப்பட்டிருக்கவில்லை. […]

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் இன்று விஜய் ஆஜர்

த.வெ.க. தலைவர் விஜய் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ந்தேதி அன்று கரூரில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு மேற்பார்வையில் சிபிஐ விசாரித்து வருகிறது. கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் சி.பி.ஐ. அதிகாரிகள் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள். அங்கு வைத்து புஸ்சி ஆனந்த், நிர்மல்குமார், ஆதவ் அர்ஜூனா. […]

ஓய்வுபெற்ற தம்பதியை 18 நாட்கள் ‘டிஜிட்டல் கைது’ செய்து ரூ.14.85 கோடி மோசடி

டெல்லியில் வசித்து வரும் டாக்டர் தனேஜா மற்றும் அவரது மனைவி இந்திரா ஆகியோரிடம் சைபர் குற்றவாளிகள் கைவரிசை காட்டியுள்ளனர். கடந்த 48 ஆண்டுகளாக அமெரிக்காவில் பணியாற்றிவிட்டு ஓய்வு பெற்ற இந்தத் தம்பதி, தற்போது டெல்லியில் தொண்டு நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகின்றனர். கடந்த டிசம்பர் 24-ம் தேதி இந்திராவைத் தொடர்பு கொண்ட மர்ம நபர்கள், தங்களைச் சட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் என அறிமுகப்படுத்திக் கொண்டனர். தேச பாதுகாப்பு விதிகளின் கீழ் பணமோசடி செய்ததாகக் கூறி, தம்பதி இருவர் […]

டெல்லியில் அதிரடி: போலி ஆவணங்களுடன் தங்கியிருந்த 25 வங்கதேசத்தினர் கைது

டெல்லியில் சட்டவிரோதமாகக் குடியேறி வசித்து வந்த 25 வங்கதேசத்தினரை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். நம் அண்டை நாடான வங்கதேசத்தைச் சேர்ந்த பலர், டெல்லியின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாகத் தங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் டெல்லி போலீசார் நகரின் பல இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இந்தச் சோதனையின் போது, உரிய ஆவணங்களின்றி வசித்து வந்த வங்கதேசத்தினரை போலீசார் கண்டறிந்து பிடித்து விசாரித்தனர். அவர்களின் ஆவணங்களைச் சரிபார்த்தபோது, அவர்கள் போலி ஆவணங்களைத் தயாரித்து, உள்ளூர் […]

டெல்லியை முடக்கிய கடும் பனிமூட்டம்…228 விமான சேவைகள் ரத்து

டெல்லியில் அடர்ந்த பனிமூட்டம் நிலவுவதால் விமானப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில், குறைந்த வெளிச்சம் காரணமாக விமான சேவைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டன. டெல்லியில் பனி அடர்ந்த சூழலால், தெளிவற்ற வானிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக டெல்லி விமான நிலையத்தில், 131 விமானங்களின் புறப்பாடு மற்றும் 97 விமானங்களின் வருகை என மொத்தம் ஏர் இந்தியா, இண்டிகோ உள்ளிட்ட பல்வேறு விமான நிறுவனங்களின் 228 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இவற்றில் ஏர் […]

சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து

டெல்லியில் உள்ள சகுர்பஸ்தி ரயில் நிலையம் வழியாக சரக்கு ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த ரயிலின் 2 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து தடம்புரண்டு விபத்து ஏற்பட்டது.இதையடுத்து ரயில் ஓட்டுநர் உடனடியாக ரயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தடம்புரண்ட ரயிலை மீட்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர். இந்த விபத்து தொடர்பாக ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.