பிரதமர் வருகை: செங்கல்பட்டில் 3 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை
பிரதமர் நரேந்திர மோடி வரும் 23-ம் தேதி செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெற உள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்கத் தமிழகம் வருகிறார். பிரதமரின் வருகையை முன்னிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகத் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் இன்று முதல் வரும் 23-ம் தேதி வரை 3 நாட்களுக்கு மாவட்டம் முழுவதும் ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் பறக்கத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். முன்னதாக, பாதுகாப்பு […]
திருச்சியில் நாளை ‘மோடி பொங்கல்’ விழா: மத்திய அமைச்சர் அமித்ஷா பங்கேற்பு – ஸ்ரீரங்கம் கோவிலிலும் தரிசனம்!
தமிழகத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நாளை திருச்சியில் நடைபெறவுள்ள பிரம்மாண்டமான ‘மோடி பொங்கல்’ விழாவில் கலந்து கொள்கிறார். இதற்காக திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பயணத் திட்டம் மற்றும் பொதுக்கூட்டம் அந்தமானிலிருந்து இன்று மாலை தனி விமானம் மூலம் திருச்சி வரும் அமித்ஷா, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுக்கோட்டை செல்கிறார். அங்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நடத்தி வரும் பிரசாரப் பயணத்தின் […]