தஞ்சையில் ரூ.56.41 கோடியில் சோழர் அருங்காட்சியகம்… முதல்வர் அடிக்கல்
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் 56 கோடியே 41 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள மாபெரும் சோழர் அருங்காட்சியகத்திற்கு அடிக்கல் நாட்டினார் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின். மாபெரும் சோழர் அருங்காட்சியகத்திற்கு அடிக்கல் நாட்டுதல்,சோழர்களின் மகத்தான பங்களிப்புகளை நினைவுகூரும் வகையில், சோழர் காலக் கலைப்பொருட்கள் மற்றும் நினைவுச் சின்னங்களை பாதுகாத்து எதிர்காலத் தலைமுறைகளுக்காக காட்சிப்படுத்தும் நோக்கில், 202324 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் மாபெரும் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பின்படி, தஞ்சாவூர், தமிழ்ப் […]