உறையூர் டாஸ்மார்க் கடையில் திருட முயற்சி…மர்ம ஆசாமிக்கு வலைவீச்சு
திருச்சி உறையூர் கோனக்கரை ரோடு பகுதியில் அரசு மதுபானக் கடை (டாஸ்மாக்) இயங்கி வருகிறது. இந்தக் கடையின் மேற்பார்வையாளராக முத்துச்செல்வன் என்பவர் பணியாற்றி வருகிறார். நேற்று இரவு விற்பனை முடிந்ததும், விற்பனையாளர் தனபாலுடன் சேர்ந்து கடையைப் பூட்டிவிட்டு முத்துச்செல்வன் வீட்டிற்குச் சென்றுள்ளார். இன்று அதிகாலை, கடையின் பாரில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் தூய்மைப் பணிக்காக வழக்கம்போல் கடைக்கு வந்துள்ளார். அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் டாஸ்மாக் கடையின் ஷட்டர் பூட்டுகளை உடைத்துக் கொண்டிருப்பதைக் கண்டு […]