கோவை-திருப்பூரில் நாளை முதல் 50% ஜவுளி உற்பத்தி நிறுத்தம்

திருப்பூர்: கோவை, திருப்பூரில் நாளை முதல் 50% ஜவுளி உற்பத்தி நிறுத்தம் என திருப்பூர், கோவை ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் அறிவித்துள்ளார். கடந்த 3 வாரமாக நூல் விலை கிலோவுக்கு 30 ரூபாய் அளவுக்கு 20 சதவீதம் உயர்ந்துள்ளது. நூல் விலை உயர்வால் விற்க முடியாமல் 100 கோடி ரூபாய் துணிகள் தேக்கமடைந்துள்ளது. விசைத்தறிக்கு பாவு நூல் கொடுத்து துணியாக நெய்து பெறும் ஜவுளி உற்பத்தியார்கள் ஸ்டிரைக் அறிவித்துள்ளனர்.

திருப்பூர்- ஒடிசா- கட்டிட பணியாளரின் சைக்கிள் பயணம்

திருப்பூரில் கடந்த சில ஆண்டுகளாக கட்டிட பணிகளில் ஈடுபட்டு வந்த ராகவன் என்னும் நபர் தனது சொந்த மாநிலமான ஒடிசா செல்ல தீர்மானித்தார். நண்பர் ஒருவர் கேரளாவில் இருப்பதால் அவரைப் பார்த்துவிட்டு புறப்படும் வேளையில் சைக்கிளில் செல்ல முடிவு செய்தார். இதனை அடுத்து கேரளாவில் சாதாரண சைக்கிளை வாங்கிய ராகவன் தேசிய கொடிகளை கட்டி புறப்பட்டார். பொள்ளாச்சி வழியே தேசிய கொடியுடன் சென்ற ராகவனை பொதுமக்கள் ஆச்சிரியத்துடன் கண்டு உற்சாகப்படுத்தினர். இது குறித்து ராகவன் கூறும் பொழுது.. […]

போலீஸ் SI-க்கு மிரட்டல்- தவெக நிர்வாகிகள் கைது

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே ஆலம்பாடி பகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் தெருமுனை பிரச்சாரம் நேற்று நடைபெற்றுள்ளது. இதற்கு முறையாக அனுமதி பெறாமல் நடத்தப்பட்டது குறித்து காங்கேயம் எஸ். ஐ சரவணன் உள்ளிட்ட காவலர்கள் கேட்டுள்ளனர்.அப்போது, அங்கிருந்த தவெக நிர்வாகிகள் எஸ். ஐக்கு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து எஸ். ஐ சரவணன் அளித்த புகாரின் பேரில் தவெக நிர்வாகிகளான ஆலம்பாடி கிளை செயலாளர் நடராஜ் (51), செயற்குழு உறுப்பினர் பிரதீப் குமார் ( […]

திருப்பூர் ரயில்வே ஸ்டேசனிற்கு வெடிகுண்டு மிரட்டல்

கடந்த 14-ஆம் தேதி சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்த மர்ம நபர் ஒருவர், திருப்பூர் ரயில்வே ஸ்டேசனில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்தார். இத்தகவலை அடுத்து, திருப்பூர் ரயில்வே போலீசார் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் ரயில் நிலையம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். நீண்ட நேரத் தேடுதலுக்குப் பிறகு வெடிகுண்டு எதுவும் சிக்காததால், அது வெறும் வதந்தி என்பது உறுதியானது. இதனைத் தொடர்ந்து, மிரட்டல் விடுத்த மர்ம நபரை போலீசார் தீவிரமாகத் […]