லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. கைது
துணை முதல்வர் வழங்கிய இலவச வீட்டு மனை பட்டாவை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் குமாரசேரி பகுதியைச் சேர்ந்த 12 பேருக்கு, சமீபத்தில் திருவேற்காட்டில் நடைபெற்ற அரசு விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இலவச வீட்டு மனை பட்டாக்களை வழங்கினார். இந்தப் பட்டாக்களை முறையாக அரசு இணையதளத்தில் (Online) பதிவேற்றம் செய்வதற்காக, பயனாளிகள் குமாரசேரி கிராம […]
மண்ணெண்ணெய் ஸ்டவ் வெடித்து பெண் பலி.. கணவன்-மகன் காயம்
திருவள்ளூர் அருகே மண்ணெண்ணெய் ஸ்டவ் வெடித்து காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழந்தார். வீட்டில் மண்ணெண்ணெய் ஸ்டவ் திடீரென்று வெடித்தபோது தீ விபத்து ஏற்பட்டு வச்சலா என்பவர் படுகாயம் அடைந்தார். வச்சலாவை காப்பாற்ற முயன்ற அவரது கணவர் சுகுமார், மகன் லத்திஸ் காயமடைந்தனர். இந்தநிலையில் வச்சலா பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
+1 மாணவன் ரயிலில் பாய்ந்து தற்கொலை- சோகம்
திருவள்ளூர் மாவட்டம், தோக்கம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி தங்கமணி. இவரது மகன் பூவரசன் (17),அரசினர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். நேற்று வழக்கம்போல பள்ளிக்குச் சென்ற பூவரசன், மாலை வீடு திரும்பாமல் ஆரம்பாக்கம் ரயில் நிலையத்திற்குச் சென்றார். அங்கு, அவர் மின்சார ரயில்கள் வந்து செல்லும் நடைமேடையில் நின்று கொண்டிருந்தார். அப்போது, சென்னை சென்ட்ரலில் இருந்து ஆந்திர மாநிலம் சூலூர்பேட்டை செல்லும் மின்சார ரயில் ஆரம்பாக்கம் ரயில் நிலைய நடைமேடைக்கு வந்து கொண்டிருந்தது. நடைமேடையில் நின்று […]
சென்னை, திருவள்ளூரில் கன முதல் மிக கனமழை எச்சரிக்கை
அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறவிப்பு மற்றும் எச்சரிக்கை: 01-12-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் ராணிபேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். வடதமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுவையில் பலத்த தரைக்காற்று மணிக்கு 45 முதல் 55 […]
வினையான விளையாட்டு-தொட்டில் சேலை இறுக்கி 8ம் வகுப்பு மாணவன் பலி
திருவள்ளூரை சேர்ந்தவர் சதீஷ் (41 வயது). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி மீனா (38). இவர்களுக்கு பவ்யஸ்ரீ (15 ) என்ற மகளும், ஹரிஹரன் (13) என்ற மகனும் இருந்தனர். பவ்யஸ்ரீ, தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். ஹரிஹரன், 8-ம் வகுப்பு படித்து வந்தார். மீனாவின் உறவினரான ஆந்திராவை சேர்ந்த நந்தினி என்பவர் பிரசவத்துக்காக சில தினங்களுக்கு முன்பு சதீஷ் வீட்டுக்கு வந்து தங்கி இருந்தார். இதனால் குழந்தைக்காக வீட்டின் மாடியில் உள்ள படுக்கை […]