மலை உச்சி தூணில் தீபம் ஏற்றலாம் – திருப்பரங்குன்றம் வழக்கில் ஐகோர்ட் தீர்ப்பு விவரம்

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றலாம் என்ற தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவை இரு நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உறுதி செய்துள்ளது. நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் […]

சென்னையில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து 3 பேர் படுகாயம்

சென்னையில் கடந்த சில நாட்களாக ‘டிட்வா’ புயலின் தாக்கத்தாலும், வடகிழக்குப் பருவமழையின் தீவிரத்தாலும் கனமழை நீடித்து வருகிறது. இந்தத் தொடர் மழையால் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மிதக்க, பழைய மற்றும் பழுதடைந்த கட்டிடங்களின் ஸ்திரத்தன்மை கேள்விக் குறியாகியுள்ளது. இந்நிலையில், புரசைவாக்கம் பகுதியில் நிகழ்ந்த ஒரு துயரச் சம்பவம் ஒட்டுமொத்த நகரையும் உலுக்கியுள்ளது. சென்னை, புரசைவாக்கம் பிரதானப் பகுதியில் அமைந்திருந்த ஒரு பழமையான அடுக்குமாடி குடியிருப்பு எதிர்பாராத விதமாக திடீரென இன்று இடிந்து விழுந்தது. தொடர் கனமழை காரணமாகக் […]