மகாராஷ்டிராவின் முதல் பெண் துணை முதல்வர்: சுனேத்ரா பவார் பதவியேற்பு
மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சராக இருந்த அஜித் பவார் கடந்த 28-ம் தேதி விமான விபத்தில் காலமானதைத் தொடர்ந்து, அவரது மனைவி சுனேத்ரா பவார் இன்று (ஜனவரி 31) மாலை 5 மணிக்கு புதிய துணை முதலமைச்சராகப் பதவியேற்றார். இதன் மூலம் மகாராஷ்டிராவின் முதல் பெண் துணை முதலமைச்சர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சுனேத்ரா பவாருக்கு, கலால் மற்றும் விளையாட்டுத் துறைகள் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. […]
மு.க.ஸ்டாலின் சுற்றுச் சூழல் சுற்றுலா பூங்கா… துணை முதலமைச்சர் திறந்து வைத்தார்
திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை-திருக்கோவிலூர் சாலையில் நெடுஞ்சாலைத்துறையால் அமைக்கப்பட்டுள்ள மு.க.ஸ்டாலின் சுற்றுச் சூழல் சுற்றுலா பூங்காவினை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். திருக்கோவிலூர் சாலையில் திருவண்ணாமலை நெடுஞ்சாலைத்துறையால் அமைக்கப்பட்டுள்ள மு.க.ஸ்டாலின் சுற்றுச் சூழல் சுற்றுலா பூங்காவானது, எடப்பாளையம் ஏரியை தூர்வாரி, நிலத்தடி நீர் உயரும் வகையில் மழைநீர் சேகரிக்கும் அமைப்பாக 33 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ளது. ஏரியின் உபரிநீர் வெளியேறும் சிறிய பாலத்தில் வில்நாண் (Bow String) வடிவில் வண்ண மின்விளக்குகளால் ஒளிரக்கூடிய வகையிலான […]