அரியலூரில் தூய்மை பணியாளர்களுக்கு உணவுத்திட்டம் துவக்கம்

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், திருவள்ளுர் மாவட்டம், போளிவாக்கத்தில் நடைபெற்ற அரசு விழாவில் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் தூய்மைப் பணியாளர்களுக்கு உணவுத் திட்டம் விரிவாக்கத்தை தொடங்கி வைத்து, தூய்மைப் பணியாளர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கிய நிகழ்ச்சியின் காணொளிக்காட்சி நேரலை அரியலூர் மாவட்டம், அரியலூர் நகராட்சி, முருகன் திருமண மண்டபத்தில் ஒளிபரப்பு செய்யப்பட்ட நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி கலந்துகொண்டார். அதனைத்தொடர்ந்து அரியலூர் நகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா […]

தூய்மை பணியாளர்கள் உணவுத் திட்ட விரிவாக்கம் துவக்கம்

தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம் அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு விரிவாக்கம் செய்யப்படுகிறது. திருவள்ளூர் போளிவாக்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விரிவாக்கத் திட்டத்தை தொடங்கி வைத்தார். 24 மாநகராட்சிகள், 141 நகராட்சிகள், 480 பேரூராட்சிகளில் பணிபுரியும் 1.50 லட்சம் பணியாளர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது. முதற்கட்டமாக ஏற்கனவே சென்னை மாநகராட்சியில் 30,000 தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.

புதுகை முனீஸ்வரர் ஆலய ஜல்லிக்கட்டு போட்டி துவக்கம்

புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி, தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட காட்டுப்பட்டியில் நடைபெற்ற முனீஸ்வரர் ஆலய  ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது.  புதுக்கோட்டை வடக்கு மாவட்ட கழக செயலாளர  கே கே செல்லபாண்டியன் ,புதுக்கோட்டை எம்எல்ஏ. வை. முத்துராஜா ஆகியோர்கள் துவக்கி வைத்தனர், பின்னர் சிறந்த காளைகளுக்கும், வீரர்களுக்கும் பரிசு வழங்கினர். நிகழ்வில் அரசு அதிகாரிகள், திமுக நிர்வாகிகள், விழா குழுவினர் மாடுபிடி வீரர்களும், பார்வையாளர்களும், கலந்துகொண்டனர்.

ரூ.10 லட்சத்தில் இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கும் திட்டம் துவக்கம்

பஞ்சாபில் அனைத்து குடும்பங்களுக்கும் ஆண்டுக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அரசு, தனியார் என 850+ மருத்துவமனைகளில் ரூ.10 லட்சம் வரை இலவசமாக சிகிச்சைப் பெறலாம். இது அனைத்துவித மருத்துவ சிகிச்சை மற்றும் பரிசோதனைகளுக்கும் பொருந்தும் என்றும், 65 லட்சம் குடும்பங்கள் இதனால் பயன்பெறுவர் என்றும் பஞ்சாப் அரசு தெரிவித்துள்ளது.

திருவனந்தபுரத்தில் 3 அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள்- துவக்கம்

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் 3 அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் ஒரு பயணிகள் ரயில் என மொத்தம் நான்கு புதிய ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். திருவனந்தபுரம் – தாம்பரம், நாகர்கோவில் – மங்களூரு சந்திப்பு, மற்றும் திருவனந்தபுரம் – சார்லப்பள்ளி ஆகிய வழித்தடங்களில் இந்த நவீன அம்ரித் பாரத் ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இவற்றுடன் குருவாயூர் – திருச்சூர் இடையிலான பயணிகள் ரயில் சேவையையும் பிரதமர் தொடங்கி வைத்தார். இந்த […]

இந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயிலை துவக்கி வைத்தார் பிரதமர்

மால்டாவிற்கு வருகை தரும் பிரதமர், மேற்கு வங்கம் மற்றும் வடகிழக்கு பிராந்தியத்தில் போக்குவரத்து இணைப்பை வலுப்படுத்துதல், வளர்ச்சியை வேகப்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட ரூ. 3,250 கோடி மதிப்பிலான ரயில் மற்றும் சாலை உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவார். நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் மால்டா நகர் ரயில் நிலையத்திற்கு வருகை தரும் பிரதமர், அங்கு ஹவுரா – குவஹாத்தி (காமாக்யா) இடையே, தூங்கும் வசதிகொண்ட இந்தியாவின் முதலாவது வந்தே பாரத் ரயிலை மால்டா நகர் ரயில் […]

அமமுக சார்பில் விருப்ப மனு விநியோகம் துவக்கம்

 2026 தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிட விருப்பம் உள்ளோருக்கு விருப்ப மனு விநியோகம் தொடங்கியது. தமிழ்நாட்டில் 234 தொகுதிகள், புதுச்சேரியில் அமமுக சார்பில் போட்டியிடுவோருக்கு விருப்ப மனு விநியோகம் துவங்கியது. தமிழ்நாட்டில் போட்டியிட ரூ.10,000, புதுச்சேரியில் போட்டியிட ரூ. 5,000 செலுத்தி விருப்ப மனுவை பெறலாம். இன்று முதல் டிசம்பர் .18 வரை விருப்ப மனுவை பெற்று ஜனவரி.3க்குள் அமமுக அலுவலகத்தில் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டது