போதைப்பொருள் வழக்கில் தமிழ் சினிமா நடிகை உட்பட 9 பேர் கைது
போதைப் பொருள் தடுப்புப் பிரிவு காவல்துறையினருக்கு வளசரவாக்கம் பகுதியில் போதைப்பொருள் பயன்படுத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், போலீசார் அப்பகுதியில் நடத்திய விசாரணையில், முதலில் நெசப்பாக்கத்தை சேர்ந்த விக்னேஸ்வரன் (35) என்ற இளைஞரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த போதைப்பொருளை கோபாலபுரத்தை சேர்ந்த வெங்கடேஷ்குமார் (31) என்பவர் வழங்கியதாக விக்னேஸ்வரன் தெரிவித்ததை அடுத்து, போலீசார் அவரையும் கைது செய்தனர். இதன்பின் போலீசாரின் தொடர் விசாரணையில், திரைப்பட நடிகை […]