கொளத்தூரில் நவீன டயாலிசிஸ் மையம் மற்றும் ஏரிக்கரை பூங்கா: முதலமைச்சர் திறந்து வைத்தார்
வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின்கீழ், கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். கொளத்தூர் அகரம் பகுதியில் ₹11.74 கோடி செலவில் நான்கு தளங்களுடன் கட்டப்பட்டுள்ள புதிய ரத்த சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மறுவாழ்வு மையத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார். இந்த மையத்தில் 15 படுக்கை வசதிகளுடன் கூடிய டயாலிசிஸ் பிரிவு, பிஸியோதெரபி, செயற்கை மூட்டு மையம் உள்ளிட்ட நவீன மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், இதே வளாகத்தில் 6 புதிய […]