கோவை-திருப்பூரில் நாளை முதல் 50% ஜவுளி உற்பத்தி நிறுத்தம்
திருப்பூர்: கோவை, திருப்பூரில் நாளை முதல் 50% ஜவுளி உற்பத்தி நிறுத்தம் என திருப்பூர், கோவை ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் அறிவித்துள்ளார். கடந்த 3 வாரமாக நூல் விலை கிலோவுக்கு 30 ரூபாய் அளவுக்கு 20 சதவீதம் உயர்ந்துள்ளது. நூல் விலை உயர்வால் விற்க முடியாமல் 100 கோடி ரூபாய் துணிகள் தேக்கமடைந்துள்ளது. விசைத்தறிக்கு பாவு நூல் கொடுத்து துணியாக நெய்து பெறும் ஜவுளி உற்பத்தியார்கள் ஸ்டிரைக் அறிவித்துள்ளனர்.
சூறைக்காற்று வீசுவதால்… பாம்பன் பாலத்தில் ரயில் சேவை நிறுத்தம்
இன்று (வெள்ளிக்கிழமை) தென் மாவட்டங்களில் அனேக இடங்களிலும், வட மாவட்டங்களில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழையும், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் டிட்வா புயல் காரணமாக ராமேசுவரத்தில் பலத்த சூறைக் காற்று மணிக்கு 50 கி.மீ வேகத்தில் வீசுவதால் பாம்பன் பாலம் வழியே […]