5 பவுன் நகையை மீட்க கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

நீலகிரி மாவட்டம் உதகை நொண்டிமேடு பகுதியைச் சேர்ந்த காயத்ரி என்ற பெண், இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தின் போது திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். கடந்த கொரோனா காலகட்டத்தில், தனது வீட்டின் அருகே வசிக்கும் சந்திரிகா என்பவரிடம் காயத்ரி 7 பவுன் தங்க நகைகளை ஒப்படைத்துள்ளார். அதில் 2 பவுன் நகைகள் மட்டுமே திருப்பி அளிக்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 5 பவுன் நகைகளை மீட்டுத் தரக் கோரி […]

கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை- நீலகிரி வரும் சுற்றுலா பயணிகள்… கட்டுபாடுகள் விதிப்பு

கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையை ஒட்டி உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ‘நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்ட சுற்றுலா தலங்களுக்கு மட்டுமே செல்ல வேண்டும்.வனப்பகுதிகளுக்குள் வீடியோ எடுக்கவும், டிரோன் பறக்கவிடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். hidden spots என்ற குறி சமூக வலைத்தளங்களில் வீடியோ பதிவிடக்கூடாது என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அதைபோல் hidden spots பாதுகாப்பு இல்லாத வனப்பகுதி என்று சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி […]

நீலகிரி அருகே கால்நடைகளை கொன்ற புலி கூண்டில் சிக்கியது

நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா தேவர்சோலை பகுதியில் கடந்த 4 மாதங்களாக புலி ஒன்று, ஆடு, மாடு என 30-க்கும் மேற்பட்ட கால்நடைகளை வேட்டையாடியுள்ளது. மேலும், பொதுமக்களையும் புலி அச்சுறுத்தி வந்தது. இதையடுத்து புலியை கூண்டு வைத்து பிடிக்கக்கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். கூடலூர் வனத்துறையினர் 5 இடங்களில் இரும்பு கூண்டுகளை வைத்தனர். கூண்டில் புலிக்கு இரையாக ஆடுகளை கட்டி வைத்தனர். ஆனாலும், கடந்த 4 மாதங்களாக புலி சிக்காமல் இருந்தது. பின்னர், கேரள மாநிலம் நிலம்பூரில் […]

புலி தாக்கி பழங்குடியின பெண் பலி

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே மசினகுடி ஊராட்சி, மாவனல்லா பகுதியை சேர்ந்தவர் பாலன் (69). இவரது மனைவி நாகியம்மாள் (65). பழங்குடியின பெண்ணான இவர், ஊருக்கு அருகே உள்ள வனப்பகுதியில் ஆடு, மாடுகளை மேய்த்துக்கொண்டிருந்தார்.அப்போது, அருகில் உள்ள வாய்க்காலுக்கு தண்ணீர் குடிக்க வந்த புலி ஒன்று, மரத்தடியில் நின்று கொண்டிருந்த நாகியம்மாளை பாய்ந்து தாக்கியது. அவரது அலறல் சத்தம் கேட்டு, தூரத்தில் இருந்த பார்த்த சிறுவன் ஒருவன், உடனடியாக ஊருக்குள் ஓடிச்சென்று நடந்த சம்பவத்தை தெரிவித்தான். உடனே […]