பாதயாத்திரை சென்ற பெண்கள் மீது கார் மோதல்: 4 பேர் பலி

பெரம்பலூர் அருகே இன்று அதிகாலை சமயபுரத்திற்குப் பாதயாத்திரையாக வந்த பக்தர்கள் கூட்டத்தில் கார் புகுந்ததில் 4 பெண் பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தைப்பூசத்தை முன்னிட்டு திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்குப் பாதயாத்திரையாகப் புறப்பட்டனர். வழியில் சேலத்தில் இருந்து வந்த மற்றொரு குழுவினருடன் இணைந்து சுமார் 60 பேர் கொண்ட குழுவாக இன்று அதிகாலை 5 மணி அளவில் பெரம்பலூர் சிறுவாச்சூர் மேம்பாலம் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் […]