கோவையில் பிப்ரவரி இறுதியில் ‘பெரியார் அறிவுலகம்’ திறப்பு: அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு

கோவை காந்திபுரம் பகுதியில் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் எட்டு தளங்களுடன் கூடிய பிரம்மாண்டமான ‘பெரியார் அறிவுலகம்’ நூலகம் கட்டப்பட்டு வருகிறது. வரும் தேர்தலுக்குள் இதனைத் திறந்து வைக்கத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இதற்கான கட்டுமானப் பணிகளைப் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகளின் தற்போதைய நிலை மற்றும் எப்போது முழுமையடையும் என்பது குறித்து ஒப்பந்ததாரர் மற்றும் பொறியாளர்களிடம் அவர் விரிவாகக் கேட்டறிந்தார். ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, “முதலமைச்சர் […]