சென்னையில் பிட்புல், ராட்வீலர் நாய் வளர்த்தால் ரூ.1 லட்சம் அபராதம்
மேயர் பிரியா தலைமையில் சென்னை மாநகராட்சி கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தடை செய்யப்பட்ட நாய் இனங்களை வளர்க்கக் கூடாது என்று சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார். அப்படி வளர்த்தல் ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்றும் விதிமுறைகள் வகுக்கப்பட்டிருக்கிறது. சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் அதற்கான தீர்மானம் என்பது நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கக்கூடிய வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. […]