புதுமைப் பெண் திட்டம் குறித்த கண்காணிப்பு குழு கூட்டம்
புதுக்கோட்டை மாவட்டம் ஆட்சியரக கூட்டரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் தமிழ்ப்புதல்வன் மற்றும் புதுமைப் பெண் திட்டங்கள் குறித்த மாவட்ட அளவிலானகண்காணிப்புக் குழு கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் மு. அருணா தலைமை வகித்தார். மாவட்ட சமூகநல அலுவலர் மே. சியாமளா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ந. நந்தகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.