பள்ளிக்கு தாமதமாக வந்த மாணவர்கள்-ஆசிரியர்கள்-வௌியில் நிறுத்தம்
பொங்கல் பண்டிகை முடிந்து, அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி இன்று வழக்கம் போல் திறக்கப்பட்டது. மாணவர்களும், ஆசிரியர்களும் ஆர்வத்துடன் பள்ளிக்கு வருகை புரிந்தனர். மாணவர்கள், ஆசிரியர்கள் தமிழ் தாய் வாழ்த்துடன் பிரேயர் செய்ய கூடினர். பள்ளி தொடங்கியதையடுத்து பள்ளியின் கேட் மூடப்பட்டது. தாமதமாக பள்ளிக்கு வந்த மாணவர்கள் வெளியில் நிருந்தப்பட்டனர். மேலும் பள்ளிக்கு தாமதமாக வந்த ஆசிரியர்களும், மாணவர்களுடன் வெளியில் நிறுத்தப்பட்டனர். இதனையடுத்து பிரேயர் முடிந்ததும் மாணவர்களும், ஆசிரியர்களும், இனி தாமதமாக பள்ளிக்கு வரக்கூடாது […]
பொங்கல் பண்டிகை- 2 நாளில் ரூ.518 கோடிக்கு மது விற்பனை
தமிழகத்தில் இந்த ஆண்டு (2026) பொங்கல் பண்டிகையையொட்டி மது விற்பனை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. நீங்கள் குறிப்பிட்டது போலவே, முதல் இரண்டு நாட்களில் மட்டும் டாஸ்மாக் நிர்வாகம் பெரும் வருவாயைப் பெற்றுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்கள் இதோ:🍾 பொங்கல் மது விற்பனை 2026: முக்கியப் புள்ளி விவரங்கள் கடந்த இரண்டு நாட்களில் (போகி மற்றும் தைப்பொங்கல்) தமிழகம் முழுவதும் உள்ள 4,829 டாஸ்மாக் கடைகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மனமகிழ் மன்றங்கள் மூலம் ரூ.518 கோடிக்கு மதுபானங்கள் […]
பொங்கல் பண்டிகை- 1 கிலோ மல்லி ரூ.6000 விற்பனை
பூக்கள் வரத்து குறைவு மற்றும் பொங்கலை முன்னிட்டு மல்லிகை, முல்லை, செவ்வந்தி பூக்களின் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. 1 கிலோ மல்லிகை பூ ரூ.6000க்கும், 1 கிலோ முல்லைப்பூ ரூ.3000க்கும், 1 கிலோ ஜாதிப்பூ ரூ.1500க்கும் விற்பனையாகின்றன.
பொங்கல் பண்டிகை.. அரசு பஸ்சில் 6.90 லட்சம் பேர் பயணம்
தமிழர்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று பொங்கல் திருநாள் . தமிழ் நாடு மட்டுமின்றி உலகமெங்கும் பரவி வாழும் தமிழர்கள் இந்நாளை சிறப்பாக கொண்டாடுகின்றனர். அதன் படி இந்த ஆண்டு நாளை (ஜன.14) போகிப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. தொடர்ந்து நாளை மறுதினம் (ஜன.15) பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அதன் பின்னர் வெள்ளிக்கிழமை (ஜன.16) மாட்டுப்பொங்கல், உழவர் திருநாள் கொண்டாடப்படுகிறது. இந்த மூன்று நாளும் அரசு விடுமுறையாகும். மேலும் சனி, ஞாயிறு என அடுத்தடுத்து 5 தினங்கள் விடுமுறை வருகிறது. […]
பொங்கல் பண்டிகை.. மண்பானை வாங்க குவியும் பெண்கள்
தமிழர்களின் ஒப்பற்ற திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகிற 15ம் தேதி கோலாகலமாக கொண்டாடப் பட உள்ளது. குறிப்பாக தை மாதம் 1ம் தேதி கழனியில் விளையும் நெற்கதிர்களுக்கு தனது செங்கதிர்களை பாய்ச்சி செழிக்கச் செய்திடும் சூரியனுக்கு நன்றி செலுத்தும் விதமாக சூரியப் பொங்கல் எனப் பெயரிடப் பட்டும், தை – ஆம்தேதி (16ஆம் தேதி) உழவுத் தொழிலுக்கு உற்றத் தோழனாக விளங்கிடும் கால்நடைகளை கவுரவப் படுத்தும் விதமாக மாட்டுப் பொங்கல் எனப் பெயரிடப் பட்டும்கொண்டாடப்படுகிறது.சூரிய பொங்கலன்று வாசலில் […]
சொந்த ஊர்களுக்குப் படையெடுக்கும் மக்கள்: 3 நாட்களில் 3.58 லட்சம் பேர் பஸ்களில் பயணம்
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடச் சென்னையில் வசிக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம். ரயில் டிக்கெட்டுகள் அனைத்தும் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே தீர்ந்துவிட்ட நிலையில், மக்களின் வசதிக்காகத் தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் சேர்த்து, இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மொத்தம் 38,175 சிறப்புப் பேருந்துகளை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ரயில் டிக்கெட் கிடைக்காத பயணிகளுக்கு இந்த அரசுப் பேருந்துகள் பெரும் உதவியாக […]
பொங்கல் பண்டிகை: ஆம்னி பேருந்துகளில் 3 மடங்கு வரை கட்டணம் உயர்வு
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்லும் பொதுமக்களிடம், ஆம்னி பேருந்துகளில் வழக்கத்தை விட 3 மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 15, 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஜனவரி 18-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால், தொடர் விடுமுறையை முன்னிட்டு கடைசி நேர நெரிசலைத் தவிர்க்கும் வகையில் பொதுமக்கள் ஜனவரி 10-ம் தேதியே […]
பொங்கல் பண்டிகை: போத்தனூர் – செங்கோட்டை இடையே சிறப்பு ரயில் இயக்கம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தெற்கு ரயில்வே சார்பில் போத்தனூரில் இருந்து செங்கோட்டைக்கு (வண்டி எண் 06115) சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் வருகிற 14-ந்தேதி பிற்பகல் 2 மணிக்கு போத்தனூரில் இருந்து புறப்பட்டு திருப்பூர், ஈரோடு. சேலம், ஜோலார் பேட்டை. கல்பாடி, அரக்கோணம், பெரம்பூர், சென்னை எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, மேல் மருவத்தூர், விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி ஜங்ஷன், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன் கோவில், […]
மதுரை ஜல்லிக்கட்டு: காளைகள், வீரர்களுக்கு ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜல்லிக்கட்டு போட்டிகள் அவனியாபுரத்தில் ஜனவரி 15-ந்தேதியும், பாலமேட்டில் 16-ந்தேதியும், உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூரில் 17-ந்தேதியும் நடைபெற உள்ளன. இதற்கான முன்னேற்பாடு பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், போட்டியில் பங்கேற்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று (ஜனவரி 7) மாலை 5 மணிக்குத் தொடங்கியது. போட்டிகளில் கலந்துகொள்ள விரும்பும் காளை உரிமையாளர்கள் மற்றும் வீரர்கள், மதுரை மாவட்ட நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான madurai.nic.in வாயிலாகத் தங்களது […]
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 34,084 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: அமைச்சர் சிவசங்கர் தகவல்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 34,084 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். ஜன.9 முதல் 14 வரை சென்னையில் இருந்து 10,245 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து அமைச்சர் தெரிய்வத்துள்ளதாவது; “சென்னையில் கிளாம்பாக்கம், மாதவரம், கோயம்பேடு பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் 10 முன்பதிவு மையங்கள், கோயம்பேட்டில் 1 முன்பதிவு மையம் […]
பொங்கல் பண்டிகை- தஞ்சையில் கரும்பு விற்பனை மும்முரம்
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வருகிற 15-ந்தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. தை பொங்கலை முன்னிட்டு அச்சு வெல்லம், பச்சரிசி, நெய், முந்திரி, திராட்சை, கரும்பு, இஞ்சி, மஞ்சள் கொத்து உள்ளிட்ட பொருட்களுக்கு அதிக தேவை ஏற்படும். பொங்கல் பண்டிகை அன்று காலை பொங்கலிட்டு, சூரியனுக்கு படைத்து வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 2 வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில் பண்டிகையை கொண்டாட மக்கள் இப்போதே தயாராகி விட்டனர்.இதற்கு ஏற்றார் போல் பொங்கல் பண்டிகையில் முக்கிய […]
பொங்கல் பண்டிகை…ரேஷன் கடைகளில் தரமான வேட்டி, சேலைகள் விநியோகம்…அமைச்சர் காந்தி
பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக பொதுமக்களுக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்படும். பொங்கல் பண்டிகையை ஒட்டி ரேஷன் கடைகளில் தரமான வேட்டி, சேலைகள் மட்டுமே விநியோகம் செய்யப்படும் என அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார். மேலும் “பொதுமக்களுக்கு தரமான வேட்டி, சேலைகள் வழங்குவதில் எந்த சமரசமும் இன்றி அரசு செயல்படுகிறது. 17 லட்சம் வேட்டி, சேலைகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக உண்மைக்கு புறம்பான தகவல்களை எடப்பாடி கூறுகிறார். நிர்ணயித்த அளவீடுகளைவிட பாலியஸ்டர் சதவீதம் அதிகமாக உள்ள 13 லட்சம் வேட்டி, சேலைகள் நிராகரிப்பு. […]
பொங்கல் டிக்கெட் விற்பனை… சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தது…
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்கு செல்வோர் வசதிக்காக, ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.இந்த நிலையில், டிக்கெட் முன்பதிவு தொடங்கிய 2 நிமிடங்களில் அனைத்து ரயில் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன. முக்கியமாக தென் மாவட்டங்களுக்குச் செல்லும் அனைத்து ரயில்களிலும் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன. ஆன்லைன் மூலம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்ய முயற்சி செய்தவர்களுக்கும், காலை 5 மணி முதலே கவுன்டரில் காத்திருந்த பயணிகள் பலருக்கும் டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்தனர்.