புதுகை- கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கிய அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அரசு  கலை அறிவியல் கல்லூரியில் இலவச லேப்டாப் வழங்கும் விழா நடந்தது.  விழாவுக்கு கல்லூரி முதல்வர்  மோகனசுந்தரம். தலைமை வகித்தார். விழாவில் மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ். ரகுபதி கலந்து கொண்டு “உலகம் உங்கள் கையில்” திட்டத்தின் கீழ்  திருமயம் அரசினர் கலைக் கல்லூரி மாணவர்கள் 195 பேருக்கும், மேலைச்சிவல்புரி  கணேசர் அரசு உதவி பெறும்  கல்லூரி மாணவர்கள் 186 பேருக்கும் அரசின் விலையில்லா லேப்டாப்களை வழங்கிப்பேசினார். விழாவில் ஊரக வளர்ச்சி […]

வால்பாறை- சாலையில் காட்டு யானைகள்-பொதுமக்கள்-பயணிகள் அச்சம்

ஆனைமலை புலிகள் காப்பக மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட சிறுகுன்றா பகுதியில் சாலையைக் கடந்த யானைகளால் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பேருந்தை வழிமறித்ததால் ஓட்டுநர் மற்றும் பயணிகள் அச்சத்தில் பயணித்தனர். இந்நிலையில் வால்பாறை பகுதியில் யானைகளின் வரவு அதிகரிப்பால் பகல் நேரங்களில் பிரதான சாலைகளில் உலா வருகிறது. மேலும் வால்பாறை பகுதியில் சிறுத்தை கரடி யானைகளால் உயிர் சேதங்கள் அதிக அளவில் ஏற்படுவதால் தற்போது வன உயிரின கூடுதல் வனப்பாதுகாவலர் ராமசுப்பிரமணியன் தலைமையில் உயர் அதிகாரிகளுடன் கடந்த […]

அரியலூர்- லாரி மோதி 20 செம்மறி ஆடுகள் பலி- பொதுமக்கள் மறியல்

அரியலூர் அருகே உள்ள கொல்லாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா. இவர் செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். வழக்கம்போல மேய்ச்சலுக்காக செம்மறி ஆடுகளை ஓட்டிச் சென்று விட்டு, நேற்று மாலையில் அரியலூர் – செந்துறை சாலையில் வீடு நோக்கி திரும்பி கொண்டிருந்தார். தனியார் ( ராம்கோ) சிமெண்ட் ஆலை அருகே ஆடுகளை ஓட்டி வந்து கொண்டிருந்தபோது, சிமெண்ட் ஆலையிலிருந்து கிளிங்கர் ஏற்றிக் கொண்டு, சேலம் சென்ற டிப்பர் லாரி எதிர்பாராத வகையில் செம்மறி ஆடுகள் மீது மோதியது.இதில் கருப்பையாவுக்கு […]

திருச்சியில் சுரங்கப்பாதை அமைத்து தரக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

திருச்சி சென்னை பைபாஸ் சாலையில் உள்ள சஞ்சீவி நகர் பகுதியில் நான்கு புறங்களில் இருந்து வாகனங்கள் வந்து செல்வதால் எந்நேரமும் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது.குறிப்பாக அரியமங்கலம், பனையக்குறிச்சி, சர்க்கார் பாளையம், வேங்கூர், கல்லணை உள்ளிட்ட இருபதுக்கு மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள் தங்களின் தேவைக்காக திருச்சி சென்னை பைபாஸ் காலையில் உள்ள சஞ்சீவி நகர் பகுதியில் கடந்து வருகின்றனர்.இந்த நிலையில் சென்னை பைபாஸ் சாலையில் அதிவேக வாகனங்களால் தொடர் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும் ஏற்பட்டு […]

குருசிலாப்பட்டு அருகே அடிப்படை வசதி கோரி பொதுமக்கள் சாலை மறியல்

திருப்பத்தூர் மாவட்டம் குருசிலாப்பட்டு அடுத்த பாப்பானூர் மேடு பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. ஆனால், இருணா பட்டு மற்றும் குருசிலாப்பட்டு எனும் இரண்டு பஞ்சாயத்துகளுக்கு இடையில் இப்பகுதி அமைந்துள்ளதால், இரண்டு பஞ்சாயத்து நிர்வாகங்களும் இப்பகுதிக்கு சாலை, குடிநீர், மின்வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை வழங்காமல் புறக்கணித்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இதனைத் தொடர்ந்து பலமுறை துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் ஊராட்சி நிர்வாகத்திடம் மனுக்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், இன்று காலை […]