மாற்றுதிறனாளிகளுக்கு உதவித்தொகை உயர்த்தி வழங்க கோரி.. திருப்பத்தூரில் போராட்டம்

ஆந்திர மாநிலத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகையைப் போல் தமிழ்நாட்டிலும் உயர்த்தி வழங்கிட கோரி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைக்கான சங்கம் (TARATDAC) சார்பில் மாநிலம் தழுவிய அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டங்கள் நடைபெற்றன. இதன் ஒரு பகுதியாக, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் போராட்டக்காரர்கள் கோஷமிட்டனர். ஆந்திர மாநிலத்தில் ஊனத்தின் […]