டெல்லியில் அதிரடி: போலி ஆவணங்களுடன் தங்கியிருந்த 25 வங்கதேசத்தினர் கைது

டெல்லியில் சட்டவிரோதமாகக் குடியேறி வசித்து வந்த 25 வங்கதேசத்தினரை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். நம் அண்டை நாடான வங்கதேசத்தைச் சேர்ந்த பலர், டெல்லியின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாகத் தங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் டெல்லி போலீசார் நகரின் பல இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இந்தச் சோதனையின் போது, உரிய ஆவணங்களின்றி வசித்து வந்த வங்கதேசத்தினரை போலீசார் கண்டறிந்து பிடித்து விசாரித்தனர். அவர்களின் ஆவணங்களைச் சரிபார்த்தபோது, அவர்கள் போலி ஆவணங்களைத் தயாரித்து, உள்ளூர் […]