சொத்துக்காகக் கொடூரம்: 12 வயது மகனைக் கொன்று பெட்டிக்குள் மறைத்து வைத்த தந்தை கைது
உத்தரப் பிரதேச மாநிலம் பெரோசாபாத் மாவட்டம் ஜிஜோலி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மனைவி ஊர்மிளா ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். இத்தம்பதிக்கு மயங்க் (12) என்ற மகன் இருந்தான். ராஜேஷ் மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்பதால், மனைவியின் பெயரில் உள்ள சொத்துக்களைத் தனது பெயருக்கு மாற்றித் தருமாறு கூறி அடிக்கடி ஊர்மிளாவிடம் தகராறு செய்து வந்துள்ளார். நேற்று மீண்டும் மது போதையில் வந்த ராஜேஷ், இது தொடர்பாக மனைவியுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். கணவரைக் கண்டித்த ஊர்மிளா, வழக்கம் […]