மணிப்பூரில் வன்முறை : 50க்கும் மேற்பட்ட வீடுகள் எரிப்பு..!
மணிப்பூர், மாநிலத்தில் உக்ருல் மாவட்டத்தில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. கடந்த சனிக்கிழமை இரவு லிட்டான் பகுதியில் குக்கி சமூகத்தைச் சேர்ந்தவர்களால் நாகா சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தைத் தொடர்ந்து, திங்கள்கிழமை இரவு ஆயுதக்குழுக்கள் லிட்டான் சரேகாங் கிராமத்தில் பல வீடுகளுக்கு தீ வைத்தன. இதனால் 50க்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிரையாகின. வன்முறையால் பல குடும்பங்கள் பாதுகாப்பு கருதி அண்டை காங்போக்பி மாவட்டத்திற்கு தப்பிச் சென்றுள்ளனர்.இந்த வன்முறையால் பாதுகாப்பு நிலைமை மோசமடைந்ததால், மாவட்ட நிர்வாகம் உடனடியாக ஊரடங்கு […]
மணிப்பூரில் மீண்டும் அதிரடி: 4 பயங்கரவாதிகள் கைது
மணிப்பூரில் 2023ம் ஆண்டு இரு இனக்குழுக்களுக்கு இடையே மோதல் வெடித்தது. இந்த மோதல் வன்முறையாக மாறியதையடுத்து அம்மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.பின்னர், ராணுவம் குவிக்கப்பட்டு வன்முறை கட்டுக்கொள் கொண்டுவரப்பட்டது. மேலும், 2 ஆண்டுகளாக அமலில் இருந்த ஜனாதிபதி ஆட்சி கடந்த சில நாட்களுக்குமுன் விலக்கிக்கொள்ளப்பட்டது. அதேவேளை, மணிப்பூரில் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவர்களை கைது செய்யும் நடவடிக்கையிலும் பாதுகாப்புப்படையினர் இறங்கியுள்ளார்.இந்நிலையில், மணிப்பூரில் இன்று 4 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். அம்மாநிலத்தின் டென்கொபல், இம்பால் கிழக்கு மற்றும் மேற்கு, கக்சிங் […]
மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி வாபஸ்!
மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி உடனடியாக வாபஸ் பெறப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இன வன்முறை காரணமாக CM பைரன் சிங் கடந்த ஆண்டு ராஜினாமா செய்தார். இந்த நிலையில் ஜனாதிபதி ஆட்சி கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் ஓராண்டுக்கு பின் ஜனாதிபதி ஆட்சி வாபஸ் பெறப்பட்டுள்ள நிலையில் புதிய முதல்வராக யும்னம் கேம்சந்த் சிங் பதவியேற்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.