பனிப்பொழிவால் மல்லிகை பூ வரத்து கடும் சரிவு: கிலோ ரூ.12 ஆயிரத்திற்கு விற்பனை

மதுரை மற்றும் தென் மாவட்டங்களில் நிலவி வரும் கடும் பனிப்பொழிவு காரணமாக மல்லிகைப்பூ விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பூக்களின் வரத்து குறைந்து, விலை இதுவரை இல்லாத அளவுக்கு உச்சத்தைத் தொட்டுள்ளது. மார்கழி மாதம் தொடங்கியது முதலே தென் மாவட்டங்களில் பனியின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் செடிகளில் அரும்புகள் உருவாவது தடையாகி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தைக்கு வழக்கமாக 5 முதல் 10 டன் வரை மல்லிகைப்பூக்கள் வரும். ஆனால், கடும் […]