கோவை-மாரியம்மன் திருக்குட நன்னீராட்டு விழா… அன்னதானம் வழங்கல்
கோவை காசி நஞ்சேகவுண்டன் புதூர் அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் திருக்குட நன்னீராட்டு பெருஞ்சாந்தி பெருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. யாகசாலையில் ஆறு கால யாகங்கள் நடத்தி கோவில் கோபுரம், மற்றும் இராஜகோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் சுற்றுப்பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்த்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து அனைவருக்கும் மகா அன்னதானம் நடைபெற்றது. கோவை காசி நஞ்சேகவுண்டன் புதூர் பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில். இக்கோவிலில் விநாயகப் பெருமான், […]