மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய VSB
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 234 பயனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர், ஸ்மார்ட்போன், பேட்டரி வீல் சேர், தையல் இயந்திரம் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை முன்னாள் அமைச்சரும் கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி வழங்கினார். மாவட்ட ஆட்சித்தலைவர் தங்கவேல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ, கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி, அரசு அதிகாரிகள், திமுக நிர்வாகிகள், பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் என பலர் […]
மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய அரியலூர் கலெக்டர்
அரியலூர் மாவட்டத்தில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தினை முன்னிட்டு24 மாற்றுத்திறன் நபர்களுக்கு ரூ.97,149 மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி வழங்கினார். அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில், மாற்றுத்திறனாளிகள் தினத்தினை முன்னிட்டு ஒற்றுமையை வளர்ப்போம் உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி வாசிக்க அனைத்து துறை அரசு அலுவலர்களும் ஏற்றுக்கொண்டனர். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3 சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி இன்றையதினம் மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு ஒற்றுமையை வளர்ப்போம் உறுதிமொழியான “சிறப்புக் கவனம் தேவைப்படும் குழந்தைகளின் […]
மாற்றுதிறனாளிகளுக்கு உதவித்தொகை உயர்த்தி வழங்க கோரி.. திருப்பத்தூரில் போராட்டம்
ஆந்திர மாநிலத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகையைப் போல் தமிழ்நாட்டிலும் உயர்த்தி வழங்கிட கோரி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைக்கான சங்கம் (TARATDAC) சார்பில் மாநிலம் தழுவிய அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டங்கள் நடைபெற்றன. இதன் ஒரு பகுதியாக, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் போராட்டக்காரர்கள் கோஷமிட்டனர். ஆந்திர மாநிலத்தில் ஊனத்தின் […]