கோவை–கேரளா பேருந்து சேவை முடக்கம்

கோவை உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து கேரளாவிற்கு செல்லும் அரசு பேருந்துகள் இன்று முழுமையாக இயக்கப்படவில்லை. நான்கு தொழிலாளர் சட்டங்களை நீக்கக் கோரி நாடு தழுவிய பொதுவேலை நிறுத்தத்திற்கு கேரள அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் முழு ஆதரவு அளித்துள்ளதால் இந்த சேவை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வேலைநிறுத்தத்தின் காரணமாக, தமிழ்நாடு–கேரளா எல்லைப்பகுதிகளில் உள்ள அரசுப் போக்குவரத்து பணிமனைகளில் இருந்து இயக்கப்பட வேண்டிய பேருந்துகள் டெப்போவிலேயே நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், கேரளாவின் பாலக்காடு, திருச்சூர், கோழிக்கோடு, திருவனந்தபுரம், எர்ணாகுளம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு […]

242 ஆன்லைன் கேமிங்- சூதாட்ட இணையதளங்கள் முடக்கம்

 சட்டவிரோதமாக இயங்கி வந்த 242 ஆன்லைன் கேமிங் மற்றும் சூதாட்ட இணையதளங்களை முடக்கி ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஆன்லைன் சூதாட்டத்தால் ஏற்படும் நிதி மற்றும் சமூகத் தீங்கைக் கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய ஆன்லைன் கேமிங் சட்டத்தின்கீழ், இதுவரை 7,800 தளங்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளது.