கேரளாவில் மீண்டும் பறவைக் காய்ச்சல்: ஆலப்புழாவில் முட்டை, இறைச்சி விற்பனைக்கு தடை

கேரளாவின் ஆலப்புழா மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் ஏராளமான வாத்து, கோழி மற்றும் காடை பண்ணைகள் உள்ளன. இந்நிலையில், கடந்த சில வாரங்களாக இந்தப் பண்ணைகளில் வளர்க்கப்பட்டு வரும் நூற்றுக்கணக்கான பறவைகள் அடுத்தடுத்து திடீரென செத்து விழுந்தன. இது குறித்து கால்நடை பராமரிப்புத் துறை நடத்திய ஆய்வில், அந்தப் பறவைகளுக்கு ‘எச்5என்1’ (H5N1) வகை பறவைக் காய்ச்சல் பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டது. தற்போது ஆலப்புழா மாவட்டத்தின் அம்பலப்புழா மற்றும் கருவாற்றா ஆகிய பகுதிகளில் உள்ள பண்ணைகளில் நோய் […]