பொள்ளாச்சி சௌடேஸ்வரி அம்மன் கோயிலில் 1008 சங்காபிஷேகம்
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 85 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ ராமலிங்கம் செளடேஸ்வரி கோயிலில் கடந்த 15 ஆண்டுகளாக, 1008 சங்காபிஷேக விழா நடைபெற்று வருகிறது.இந்தாண்டிற்கான சங்காபிஷேக விழா இன்று நடந்தது.இதையொட்டி கோயில் வளாகத்தில் லிங்க வடிவில் 1008 சங்குகள் அமைக்கப்பட்டு அதில் வில்வ இலைகள், புஷ்பங்களால் அலங்கரிங்கப்பட்டிருந்தது. தொடர்ந்து சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க பூஜைகள் நடந்தது. பின்னர் மூலவர் ராமலிங்கேஷ்வரர் மற்றும்செளடேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு உள்ளிட்ட 16 வகையான மூலிகை திரவியங்களால் அபிஷேகம் […]