மளிகைக் கடை பூட்டை உடைத்து ரூ.60 ஆயிரம் அபேஸ்
திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே உள்ள காவலப்பட்டியைச் சேர்ந்த சபரிநாதன் (35), அப்பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். இன்று அதிகாலை இவரது கடையின் பூட்டு உடைக்கப்பட்டுத் திறந்து கிடப்பதைக் கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த சபரிநாதன், கடைக்குள் சென்று பார்த்தபோது கல்லாப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ரூ.60 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். மர்ம நபர்கள் நள்ளிரவில் பூட்டை உடைத்து இந்தப் பணத்தைத் திருடிச் சென்றுள்ளனர். மேலும், அதே பகுதியில் உள்ள […]