வஉசியின் நினைவு நாள்- திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு மரியாதை
இந்திய சுதந்திர போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழன் தியாகி வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் 89-நினைவு நாளை முன்னிட்டு, திருச்சி கோர்ட் எதிரில் உள்ள அவரது திருவுருவ சிலைக்குகழக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில்மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி,மாநகர செயலாளர் மேயர் அன்பழகன் முன்னிலையில் ஏராளமான திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்வில் திமுக முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்