அதிமுக மாவட்ட செயலாளர் மீது வழக்குப்பதிவு
அதிமுக மாவட்ட செயலாளர் ராஜேஷ் மீது சென்னை கொடுங்கையூர் போலீசார் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சென்னை மாநகராட்சி பூங்காவில் புகுந்து அரசின் உடைமைகளை சேதப்படுத்தியதாக உதவி பொறியாளர் புகார் அளித்துள்ளார். உதவி பொறியாளர் சத்யன் புகாரை அடுத்து ராஜேஷ் மீது அத்துமீறி நுழைதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கஞ்சா புகைத்ததை பெற்றோரிடம் கூறியதால் அடி, உதை…4 சிறுவர்கள் மீது வழக்குப்பதிவு
விருதுநகர் மாவட்டம் ஒண்டிப்புலி நாயக்கனூர் கிராமத்தில் 16, 17 வயதுடைய சிறுவர்கள் 4 பேர் கஞ்சா புகைத்தாக கூறப்படுகிறது. இது குறித்து அறிந்த அவர்களின் பெற்றோர், அந்த சிறுவர்களை கண்டித்துள்ளனர். இதற்கிடையில். தங்களை பெற்றோரிடம் அதே பகுதியை சேர்ந்த 2 சிறுவர்கள்தான் காட்டிக் கொடுத்ததாக அந்த 4 பேருக்கும் தகவல் கிடைத்துள்ளது.இதனால் ஆத்திரமடைந்த 4 பேரும், அந்த 2 சிறுவர்களை சரமாரியாக அடித்து, உதைத்துள்ளனர். இதனை அவர்கள் வீடியோவாக பதிவு செய்த நிலையில், அந்த வீடியோ சமூக […]
எச்.ராஜா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
எச்.ராஜா மீது 3 பிரிவுகளின் கீழ் நாச்சியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், மத கலவரத்தை தூண்டும் வகையில் பேசுதல், அரசு ஊழியருக்கு கீழ்படியாமை ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இருந்து திருப்பரங்குன்றத்திற்கு கடந்த 4-ந்தேதி பா.ஜனதா மூத்த தலைவர் எச்.ராஜா காரில் சென்று கொண்டிருந்தார். திருப்பத்தூர் அருகே கும்மங்குடியில் திருப்பத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் தலைமையிலான போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர்.மேலும் திருப்பரங்குன்றம் பகுதியில் 144 […]