மதுபோதையில் வாய்தகராறு… வாலிபருக்கு அரிவாள் வெட்டு

தஞ்சை அருகே உள்ள புதுப்பட்டினம் யாகப்பா சாவடி பகுதியை சேர்ந்தவர் கமாலுதீன். இவரது மகன் சிராஜுதீன்(34). இவர் அந்த பகுதியில் மளிகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு சிராஜுதீன், அம்மாகுளம் பாலம் நெய்வாய்க்கால் பகுதியில் தனது நண்பர்களுடன் மது அருந்திக்கொண்டு இருந்தார். அப்போது அம்மாகுளம் கீழவஸ்தாசாவடி மேலத்தெருவை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் பிரதீப்(29), தனது நண்பர்களுடன் மது போதையில் நெய்வாய்க்கால் பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு மது அருந்திக்கொண்டு இருந்த சிராஜுதீன் மற்றும் அவர்களது நண்பர்களிடம் தீப்பெட்டி […]