விபத்தை ஏற்படுத்தி- காரில் நின்று தம் அடித்த போதை ஆசாமிக்கு தர்ம அடி
கோவை அவிநாசி சாலையில் நள்ளிரவில் கட்டுப்பாடின்றி காரை ஒட்டி வந்து விபத்து ஏற்படுத்தியதோடு, காரின் மேல் ஏறி நின்று சிகரெட் பிடித்து ரகளை செய்த வாலிபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் அந்த வாலிபருக்கு தர்ம அடி கொடுத்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். கோவை, அவிநாசி சாலையில் நேற்று இரவு கார் ஒன்று அதிவேகமாக கட்டுப்பாடின்றி தாறுமாறாக ஓடியது. அந்த கார் பி.எஸ்.ஜி கல்லூரி அருகே சென்ற போது அங்கு இருந்து இரு சக்கர வாகனங்கள் […]